districts

img

பாஜகவை இந்தியா கூட்டணி துடைத்தெறியும்

திருவண்ணாமலை, ஏப்.16- ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடை பெற்றது. வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர். வேல்முருகன் பேசுகையில், தமிழகத்திலிருந்து கொத்தடி மைகளாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் தான், தற்போது இலங்கை தமிழர் அகதிகளாக உள்ளனர். இவர்களுக்கு குடியுரிமை இல்லை என்று பாஜக சொல்கிறது. அதற்கு அதிமுகவும், பாமகவும் ஆதரவு அளிக்கிறது. அதிமுக, பாமக, பாஜக கட்சிகளின் முறையற்ற கூட்டணிகளை இந்தியா கூட்டணி வென்று ஆட்சி அமைப்பது உறுதி என்றார். இசைப்பாடல் வெளியீடு இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப. செல்வன் எழுதி இசைஅமைத்த பாடல் கேசட்டை வேல்முருகன் வெளியிட,  மாவட்ட செயலாளர் சிவகுமார் பெற்றுக்கொண்டார். முன்னதாக வந்தவாசி வட்டார செயலாளர் அப்துல் காதர் தலைமை தாங்கினார், வட்டாரக்குழு உறுப்பினர் எம். சுகுமார் வரவேற்று பேசினார்.  இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன், ந.சேகரன், மாவட்ட குழு உறுப்பினர் முரளி, நகர நிர்வாகிகள் பெ.அரிதாசு, ந. ராதா கிருஷ்ணன்,  வந்தவாசி நகர மன்ற தலை வர் ஜலால் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.  முன்னதாக சப்தர் ஹஷ்மி கலைக்குழு சார்பில் அரசியல் விழிப்புணர்வு பாடல்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.