districts

img

திமுக வேட்பாளருக்கு சிக்கலை ஏற்படுத்த பாஜக முயற்சி: அமைச்சர் துரைமுருகன்

வேலூர், மார்ச் 21 - வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக து.மு.கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து வியாழனன்று( மார்ச் 21) குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே திறக்கப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். குடியாத்தம் திமுக நகர செய லாளரும், நகராட்சி தலைவருமான எஸ்.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார் முன்னிலை வகித்தார். இதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், மாவட்ட துணை செயலாளர் அரசு, குடியாத்தம் ஒன்றிய செய லாளர்கள் கள்ளூர் கே.ரவி, சத்யானந் தம், அண்ணாதுரை, பிரதீஷ், பேர்ணாம்பட்டு நகர ஒன்றிய செய லாளர்கள் ஆலியார் ஜூபேர் அகமது, என்.ஜனார்த்தனன் கே.சாமிநாதன், பி.காத்தவராயன், சி.சரவணன் (சிபிஎம்) ஆனந்தன், துரைசெல்வம் (சிபிஐ), ஆட்டோ மோகன்(மதிமுக), காங்கிரஸ், விசிக மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட னர். அலுவலகத்தை திறந்து வைத்து துரைமுருகன் பேசுகையில், தேர்த லுக்கு பிறகு குடியாத்தத்திற்கு அரசு மகளிர் கல்லூரி,  நெல்லூர் பேட்டை ஏரி சுற்றுலா தளம் அமைத்துத் தரப்படும் என்று கூறியதோடு, ஜனநாயகத்தின்  குரல்வளையை நெரிக்கும் காரியத்தை ஒன்றிய அரசு செய்கிறது. ஆக இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது போல் ஒரு கட்சி ஆட்சியை கொண்டுவர பாரதீய ஜனதா கட்சி முயற்சிக்கிறது. இந்த தேர்தலில் உங்கள் வாக்கு ஜன நாயகத்தை காப்பாற்றுவதற்காக செலுத்தவேண்டும், இல்லாவிட்டால் மோடி அரசு  மிசா போன்ற ஒரு சட்டத்தை கொண்டுவர தயங்காது என்றார். மேலும் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்பு வேலூரில் திமுக பிரமுகர் அலுவலகத்தில் வரு மான வரித்துறை  சோதனை நடத்தி யது. குறிப்பாக  திமுக வேட்பா ளரை சோதனை நடத்தி கைது செய்ய சொல்லி இருப்பதாக மேல் இடத்தி லிருந்து எங்களுக்கு தகவல் வந்துள்ளது.  சோதனைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தமிழ கத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்தியா கூட்டணி   மிகப் பெரிய வெற்றியை பெறும் என்றார் துரைமுருகன்.