புதுச்சேரி,மார்ச் 20- “வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாமல் 4 மாதங்களாக தடுமாறிக் கொண்டிருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என புதுச்சேரி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயண சாமி கூறினார். இண்டியா கூட்டணியில் புதுச் சேரி மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இந்நிலையில், புதன் கிழமை மாலை புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்திய நாதன், முன்னாள் அமைச்சர் கந்த சாமி உள்ளிட்டோர் திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை யிலான நிர்வாகிகளை லப்போர்த் வீதியில் உள்ள திமுக அலுவலகத் தில் சந்தித்து பேசினர். கட்சி அலுவலகத்துக்கு வந்த அவர்களை அமைப்பாளர் சிவா மற்றும் அவைத் தலைவர் எஸ்.பி.சிவ க்குமார், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் பொன்னாடை அணி வித்து வரவேற்றனர். தொடர்ந்து இரண்டு கட்சி நிர்வாகிகளும் ஒரு வருக்கொருவர் கலந்து பேசிக் கொண்டனர். இதில் முன்னாள் முதல்வர் நாரா யணசாமி பேசியது: “என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆட்சியில் புதுச் சேரி மாநில மக்கள் அவதிபடு கின்றனர். சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு ள்ளது. கஞ்சா பழக்கத்தால் இளை ஞர்கள் சீரழிந்து கொண்டிருக் கிறார்கள். நிலம், வீடு அபகரிப்பு நடக்கிறது. பெண்களுக்கு பாது காப்பு இல்லாத நிலை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது இரட்டை எஞ்சின் ஆட்சி இருக்க வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சி, மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாரும், தேனாறும் ஓடும் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அவரால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை. அவர்களின் தேர்தல் அறிக்கையை எடுத்து பார்த்தால், 5 சவீதம் கூட நிறைவேற்றவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் ரெஸ்டோ பார்களை திறந்து மதுகுடிக்கும் மாநிலமாக மாற்றிவிட்டனர். கஞ்சா மாநிலமாக ஆக்கிவிட்டனர். இவர்கள் ஆட்சியில் நீடித்தால் புதுச்சேரியின் வளர்ச்சி மட்டுமின்றி, இளைஞர் சமுதாயம் வீணாகிவிடும். அதற்கு முன்னோட்டமாக இந்த மக்களவை தேர்தல் இருக்கிறது. இந்த தேர்தலில் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருந்து வெற்றிக் கனியை பறிக்க வேண்டும். நாம் தொகுதிகளில் ஒருங்கணைந்து பாடுபட வேண்டும். பாமகவை கட்டாயப்படுத்தி பாஜக கூட்டணியில் சேர்த்துள்ளனர். அதிமுக கூட்டணி வருமா என்று கதவைத் திறந்து கொண்டு உட் காந்திருக்கின்றனர். நம்முடைய கூட்டணியை பொறுத்தவரையில் பலமான கூட்டணி. மக்கள் நலன் காக்கும் கூட்டணி. தொடர்ந்து பயணிக்கின்றோம். தமிழக முதல்வர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை பார்க்கும் போது இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களுக்கு உரிய மரி யாதை அளிக்கப்படும். மாநில உரிமை காக்கப்படும் என்று தெளி வாக கூறியுள்ளார். இதைத்தான் மத்தியில் ராகுல் காந்தி கூறியுள்ளார். ஆகவே நாம் ஒருங்கிணைந்து பாடு பட வேண்டும். கருத்து வேறுபாடு களை விட்டு இண்டியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். வேட்பாளரை கண்டுபிடிக்க முடி யாமல் 4 மாதங்களாக தடுமாறிக் கொண்டிருக்கும் என். ஆர்.காங்கிரஸ்-பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.