ஓசூர், மார்ச் 2- சிதறு தேங்காயான பாஜக கூட்டணி தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட டெபா சிட் வாங்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறி னார். மு.க. ஸ்டாலின் தலைமை யிலான இந்திய கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தேர்தல் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்க கூட்டம் ஓசூரில் சனிக்கிழமை (மார்ச் 2) நடை பெற்றது. பாஜக தலைவர்கள் தன்னடக்கம் இல்லாதவர்கள். அண்ணாமலை உட்பட வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். தைரியம் இருந்தால் அகில இந்திய தலைவர்கள் யாரா வது தமிழகத்தில் போட்டி யிட்டு பாருங்கள். ஒருவரும் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள். தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தவர்கள் தான் பாஜகவினர். காத்திருப்பு தமிழகத்தில் மிகப் பெரிய வெள்ளச்சேதம் ஏற்பட்ட போது வந்து பார்க்காதவர் கள்,37 ஆயிரம் கோடி வெள்ள சேதமாக தமிழகம் கேட்ட போதும் ஒரு சல்லி காசு கூட தராதவர்கள் பாஜக ஒன்றிய அரசை சேர்ந்தவர்கள் என்றார். தேசிய ஜனநாயக கூட்டணி சிதறு தேங்காய் போல சிதறுண்டு போய் உள்ளது. யாராவது கிடைப்பார்களா என்று ஜன்னல் கதவு எல்லா வற்றையும் திறந்து வைத்துக் கொண்டு ஆள் பிடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. தோல்வி நிச்சயம் தமிழ்நாட்டில் பாஜக நிச்சய மாக காலூன்ற முடியாது.இந்திய கூட்டணி திமுக தலை மையில் 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். மோடி அரசு 10 ஆண்டு களில் எதுவுமே செய்ய வில்லை,தேர்தல் வாக்குறுதி படி 15 லட்சம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் போட வில்லை, விவசாயிகள் விளை பொருளுக்கு இரட்டிப்பு விலை,வருமானம் இருமடங்கு உயர்வதற்கான உத்தரவாதம் அளிப்போம் என்றெல்லாம் பொய் கூறி னார்கள். ஏற்கனவே டெல்லி யில் போராடிய விவசாயி களுக்கு அளித்த வாக்குறுதி கள் எதையும் நிறை வேற்றாததால் டெல்லியில் தற்போது ஒன்றிய அரசை எதிர்த்து மீண்டும் விவசாயிகள் பிரம்மாண்டமான போராட் டத்தை நடத்திவருகின்றனர். மேடை நாகரீகம் இல்லாதவர் மோடி தொழிற்சங்க உரிமை கள் முற்றிலும் பறிக்கப்பட்டு விட்டது. எதிர்க்கும் கட்சி களை ஈடி, வருமான வரித் துறை மூலம் மிரட்டி பணிய வைக்கும் இழிவான வேளை யில் ஈடுபட்டுள்ளனர். பிரத மருக்கும் சிறிதும் அரசியல், மேடை நாகரிகம் கூட தெரிவதில்லை. தமிழகத்தில் நடந்த அரசு விழாவில் தமிழக அமைச்சர்கள் பெயரை கூட கூற மறுத்து மோடி நேரடி யாக பாஜக அரசியலை பேசு கிறார். கர்நாடகாவிலும் இந்திய கூட்டணியே மகத் தான வெற்றி பெறும் என செய்திகள் வந்துள்ளன. மக்களை வெளியேற்றி சரணாலயமா? இம் மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி உள்ளிட்ட 4 வட்டங்களில் தெற்கு காவேரி வனவிலங்கு உயிரின சரணாலயம் அமைப்பதாக கூறி 165 கிராமங்களை வெளி யேற்ற அனுமதிக்க முடி யாது. மக்களை அழித்து விவ சாயத்தை அழித்து வன விலங்கு சரணாலயம் அமைக்க மார்க்சிஸ்ட் கட்சி யினர் விட மாட்டோம். ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூள கிரி பகுதிகளில் பல தலை முறைகளாக குடி யிருந்து வருப வர்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் பட்டாக்கள் கொடுக்க மறுத்து வருவது நியாயம் இல்லை. இப் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக் காக பட்டாக்கள் கேட்டு தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போராடி வரு கிறது. இந்நிலையில் பட்டாக்கள் கொடுக்க மறுத்து வரும் இடங்களை அரசு தொழிற்சாலைகளுக்கு கொடுக்க முயற்சிப்பதும் அனு மதிக்க முடியாது என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.