districts

பாஜகவின் நவீன ஊழல் கூடாரங்கள் பெயர் சூட்டும் போராட்டம் வாலிபர் சங்கம் அழைப்பு

சென்னை,ஆக.29-

      சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி  அறிக்கை மோடி அரசின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.  

     அதில் முக்கியமான ஒன்று “டோல்  கேட்” ஊழல். 62,37,152 வாகனங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் போனதாக கணக்குகள் வெளி யாகியுள்ளது. தனியார் முகவர்கள் மூலம் நடைபெற்ற சுங்க வசூலில் அரசாங்கத்திற்கு நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  

     நாங்கள் ஊழலற்றவர்கள் என்று மார்தட்டிய மோடி தலைமையிலான பாஜக அரசு நவீன ஊழலின் அடை யாளமாக மாறியுள்ளது. பாஜகஅரசு பதவி விலக வேண்டும். இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தி பாஜகவின் நவீன ஊழ லின் கூடாரங்கள் என்னும் பெயர்களை சூட்டும் மறியல் போராட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செப்டம்பர் 1 அன்று நடத்துகிறது.

      இப்போராட்டம் பரனூர் டோல்கேட், கப்பலூர் டோல்கேட், கோவை, கன்னியாகுமரி, திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களில் நடை பெறும். இப்போராட்டத்தில் ஊழ லுக்கு எதிராக செயல்படத் துடிக்கும் அனைத்து பொது மக்களும், இளை ஞர்களும் பங்கேற்க வேண்டுமென சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.