districts

img

சென்னை அருகே மிகப்பெரிய குளிர்சாதன உற்பத்தி ஆலை திறப்பு

சென்னை, பிப்.5- குளிர் சாதன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான புளூ ஸ்டார் சென்னை அருகே தடாவில் உள்ள ஸ்ரீ சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் மிகப்பெரிய ஆலையைத் திறந்துள்ளது.  இந்த ஆலையில் வீடு மற்றும்  தொழிற்சாலைகளுக்கான குளிர்சாதனங் கள் உற்பத்தி செய்யப்படும். தொழிற்சாலை யின்  முதல் கட்டத்தில்  3 லட்சம் அறை  ஏசிக்கள் உற்பத்தி செய்யப்படும்.  2027ஆம் நிதியாண்டில் இது 12 லட்சம்  யூனிட்டுகளாக அதிகரிக்கும்.  தற்போது மாதத்திற்கு 25,000 அறை ஏசி சாதனங்களை உற்பத்தி செய்கிறோம், ஆனால் 3வது கட்டத்தில்  மாதத்திற்கு சுமார் 1 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளோம்” என்று புளூ ஸ்டார் லிமிடெட் நிர்வாக இயக்குனர் பி தியாகராஜன் கூறினார். ஏற்கனவே இந்த நிறுவனம் இமாச்சல பிரதேசம், மகாரஷ்டிரா மாநிலம் வாடா ஆகிய இடங்களில் 3 உற்பத்தி பிரிவுகளை கொண்டுள்ளது. ஸ்ரீ சிட்டி ஆலையில் ரூ. 350 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.  2027 ஆம் நிதியாண்டில் கட்டம்-3 தொடங் கப்படும் நேரத்தில் ரூ.200 கோடி கூடுதல் முதலீடு செய்யப்படும்.  ஒன்றிய உற்பத்தியுடன் இணைக் கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் மூலம் ஆலை இயந்திரங்களில் சுமார் 156 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம், மேலும் பிஎல்ஐ  மூலம் சுமார் 73 கோடி ரூபாய் எதிர்பார்க்கிறோம்” என்று தியாகராஜன் மேலும் கூறினார். நடப்பு நிதியாண்டில் 8 லட்சம் யூனிட்டுகளும் அடுத்த நிதியாண்டில் 10லட்சம்  யூனிட் விற்பனையை நிறுவனம் எதிர்பார்க்கிறது. நிறுவனத்தின் குளிர்சாதனங்கள் ரூ.29,990 என்ற விலையில் இருந்து தொடங்குகிறது.  2025ஆம் நிதியாண்டிற்குள் வீட்டு ஏசி பிரிவில் எங்களது சந்தைப் பங்கை 13.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்த விரும்புவதால், மலிவு விலை தயாரிப்பில்  கவனம் செலுத்துவதாகவும் தியாகராஜன் கூறினார்.