districts

img

மறியலை விளக்கி புவனகிரியில் உ. வாசுகி பிரச்சாரம்

சிதம்பரம், செப். 5- விலை உயர்வு, தீவிரம் அடையும் வேலை யின்மை உள்ளிட்ட மக்க ளின் அடிப்படை பிரச்சனை களுக்கு காரணமான மோடி அரசின் பொருளாதார கொள்கைகளை அம்பலப் படுத்தும் வகையில் இம்மாதம் 7-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட் டம் நடை பெறுகிறது. இந்த போராட்டத்தை விளக்கி கடலூர் மாவட்டம், புவனகிரி பேருந்து நிலையத்தில் பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது.  ஒன்றியச் செய லாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார்.  மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினார். மாவட்டச் செயலாளர் ஜி.மாத வன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ராமச் சந்திரன், நகரச் செய லாளர் மணவாளன், ஒன்றியக்குழு உறுப்பினர் சதானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.