ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பாரதிதாசன் நகர், விளிஞ்சியம்பாக்கம் பகுதிகளில் கடந்த மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக வேட்டைக்காரன் இன மக்கள் உட்பட அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் அண்மையில் நீர் பிடிப்பு பகுதி எனக் கூறி அங்குள்ள 12க்கும் மேற்பட்ட வீடு, கடைகளை இடித்துள்ளனர். இதையடுத்து அந்த பகுதி மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் சந்தித்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன், பகுதிச் செயலாளர் அ.ஜான், பகுதிக்குழு உறுப்பினர் ராபர்ட் ராஜ், லதா, தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடியினர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இ.கங்காதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.