கிருஷ்ணகிரி, ஆக. 16- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மிடுகரப்பள்ளி கிளையின் சார்பில் கடந்த 34 ஆண்டுகள் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாநிலம் தழுவிய கபடி போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 35 ஆம் ஆண்டையொட்டி, பகத்சிங் நினைவு கபடி விளை யாட்டு போட்டிகள் 77 வது சுதந்திர தினத்தன்று அம்பேத்கர் விளை யாட்டு அரங்கில் நடைபெற்றது. வாலிபர் சங்க வட்டச் செயலாளர் எம்.நாகேஷ் பாபு, ரவி தலைமை தாங்கினர். சிபிஎம் மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன், சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.ஸ்ரீதர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைத் தலைவர் நாராயண மூர்த்தி ஆகியோர் கபடி போட்டியை துவக்கி வைத்தனர். தமிழகம் முழுவதும் இருந்து 27 கபடி குழுக்கள் கலந்து கொண்டன. 37 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சென்னீரப்பா, 13 வது வார்டு மாமன்ற உறுப்பினர் யாஷ் அஸ்வினி மோகன்,40 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மஞ்சுளா முனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கபடி போட்டிகளில் முதல் பரிசு பெற்ற என்.ஆர்.பாய்ஸ் குழு விற்கு எம்.ஜி.வசந்தகுமார் ரூ. 20,000, இரண்டாம் பரிசு பெற்ற திருச்செங்கோடு அன்னை தமிழ் கபடி குழுவிற்கு வாசுதேவன் ரூ.15,000 , 3 ஆம் பரிசு பெற்ற முனியப்பன் பிரதர்ஸ், நான்காம் பரிசு பெற்ற ராகவேந்திரா கபடி குழுக்களுக்கு தலா 5000 ரூபாய் முருகேஷ் ஆகியோர் வழங்கினர். பரிசளிப்பு நிகழ்ச்சியில் டி.ராம கிருஷ்ணன், ஜி.சுரேஷ், வி.சீனி வாசன் குருபட்டி தேவா,மது ஆகி யோர் வெற்றி கோப்பை மற்றும் கேடயங்களை வழங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சிங்காரவேலன் வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயலாளர் இளவரசன், தலைவர் சக்தி, முன்னாள் மாவட்டச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி சுதந்திர கொடடியை ஏற்றினார். சிறு வர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை சிபிஎம் செயலாளர் ஸ்ரீதர் ஒருங்கிணைத்தார். முரளி நன்றி கூறினார்.