districts

img

திருவொற்றியூர் ராமநாதபுரம் நடுநிலை பள்ளிக்கு சிறந்த மேலாண்மை குழு விருது

சென்னை, ஜன. 25- திருவொற்றியூர் 4ஆவது  வார்டில் உள்ள சென்னை மாநகராட்சி ராமநாதபுரம் நடுநிலை பள்ளிக்கு சிறந்த மேலாண்மை குழு விருது கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு  பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் அனைத்து அரசு  மற்றும் மாநகராட்சி பள்ளி களில் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு சிறப் பாக செயல்பட்டு வருகிறது.  தற்போது பள்ளி மேலாண் மைக் குழு உறுப்பினர்கள் தேர்வில் அரசியல் தலையீடு இல்லாமல் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் வாக்கெடுப்பு  நடத்தி குழு உறுப்பினர் களை தேர்வு செய்ய வேண்டும். பள்ளி மேலாண்மை குழு தலைவ ராக பெண் தேர்வு செய்ய  வேண்டும். 15 உறுப்பினர் களை பெற்றோர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க  வேண்டும். தலைமை  ஆசிரியர் ஒருங்கினைப் பாளராக இருப்பார். ஒரு  ஆசிரியர் உறுப்பினராக இருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாமன்ற உறுப்பினர் அல்லது வார்டு உறுப்பினர் என 2 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். மேலும் ஒருவர் கல்வியாளர் அல்லது கல்வியில் ஆர்வமுள்ள அறக்கட்ட ளையை சார்ந்த ஒருவர் என  20 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். மாதம் ஒரு முறை இக்குழு கூடி பள்ளி யின் தேவைகள் குறித்து  விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி கல்வித் துறைக்கு அனுப்ப வேண் டும். பள்ளி கல்வித்துறை அந்த தீர்மானங்களை நிறைவேற்றும். இப்படி படிப்பட்ட ஒரு சிறப்பு திட்டம்  தமிழ்நாட்டில் உள்ளது.

அண்மையில் “விழுது கள்” என்ற தலைப்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட 10 பள்ளி மேலாண்மை குழுக்கள் தேர்வு செய்யப் பட்டு விருதுகள் வழங்கப் பட்டன. இதில் சென்னை மாநக ராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் உள்ள ராமநாத புரம் நடுநிலை பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியின் மேலாண்மைக் குழு தலை வர் லீமாரோஸ், தலைமை ஆசிரியர் முத்துசெல்வி, மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் ஆகியோர் முன்முயற்சியில் பள்ளி  ஆசிரியர்கள், மேலாண் மைக் குழு உறுப்பினர்கள் தொடர் கவனம் செலுத்தி வந்தனர். மேலாண்மைக் குழு  உறுப்பினர்கள் தினசரி  பள்ளிக்கு வருவது, மாணர்களை கண்கானிப் பது, கல்வி பயிற்சியில் ஊக்கம் குறைந்த மாண வர்களின் வீடுகளுக்கு சென்று பெற்றோர்களை சந்தித்து மாணவனை படிக்க  வைக்க பெற்றோர் உதவி  கோருவது. தேசிய திறனாய்வு தேர்வுக்கு சிறப்பு கவனம் செலுத்து வது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் மாணவர் தேர்ச்சி பெற்று அரசு உதவி பெறுகிறார்கள். மேலும் அவர்களுக்கு மாலை சிறப்பு வகுப்பு எடுப்பது. சிற்றுண்டி வழங்குவது. சில நன்கொடையாளர்கள் மூலம் உதவிகள் பெற்று கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பது. பள்ளி வளா கத்தை தூய்மையாக வைத்திருப்பது. கழிவறை களை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வது என பல பணிகளை அரசை மட்டும் சார்ந்திருக்காமல் மாணவர்களின் தேவை களை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டதால் இந்த பள்ளிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி மேலாண் மைக் குழு தலைவர் லீமா ரோசிடம் வழங்கினார்.