சென்னை, ஏப். 9 - பழங்குடியின பெண் என்பதால் குடியரசு தலைவரையே பாஜக அவமதிக்கிறது என்று திமுக துணைப்பொதுச் செய லாளர் கனிமொழி குற்றம் சாட்டினார். தென்சென்னை மக்க ளவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து திங்களன்று (ஏப்.8) விருகம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர் பகுதி களில் வாக்கு சேகரித்தார். இந்தக் கூட்டங்களில் அவர் பேசியதன் சுருக்கம் வரு மாறு: புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பாஜக மீண்டும் குலக்கல்வி முறையை கொண்டுவர முயற்சிக்கிறது. பெண் களின் உயர்கல்வி தடை படாமல் இருக்க தமிழ்நாடு அரசு புதுமைப்பெண் என்ற திட்டத்தை கொண்டு வந்து மாதம் ரூ.1000 நிதியுதவி தரப்படுகிறது. மாணவர் களுக்கும் தமிழ் புதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற திட்டங்களால் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 60 விழுக்காடாக உள்ளது. அரசியல் ஆதாயத் திற்காக பாஜக கொளுத்திய தீ மணிப்பூரில் எரிந்து கொண் டிருக்கிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பா மல், நிவாரண முகாம்க ளில் தவித்து வருகின்றனர். மலைவாழ் சமூகத்தை சேர்ந்த திரௌபதி முர் முவை பெயருக்கு குடியரசு தலைவராக வைத்துள்ளனர். மலை வாழ் சமூகத்தை சேர்ந்த வர், பெண் என்பதற்காக அரசு நிகழ்ச்சிக்கு அழைப்ப தில்லை. பாஜக ஆட்சியில் பெண் களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து 35 லட்சம் வழக்கு கள் பதிவாகி உள்ளது. பாஜக எம்பி-க்களில் 44 பேர் மீது பாலியல் வழக்கு கள் உள்ளது. பாஜக எம்.பி., பிரிஜ் பூசனை எதிர்த்து போராடிய வீராங்கனை களைத்தாக்கினார்கள். எனவே, சமூக நீதிக்கு, சமத்துவத்திற்கு எதிரான பாஜகவை வீழ்த்துவோம். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரச்சாரங்களில் அமைச்சர் மா.சுப்பிர மணியன், சட்டமன்ற உறுப்பி னர்கள் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, ஜெ.கருணாநிதி, த.வேலு, சிபிஎம் தென் சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண் டனர்.