வேலூர். ஜூலை 30-
வேலூர் மாவட்ட பீடித் தொழிலாளர்கள் சங்க மாவட்ட பேரவை குடியாத்தத்தில் மாவட்டத் தலைவர் பி.காத்தவராயன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.சலாம் சங்க கொடியை ஏற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் சி.சரவணன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் வி.நாகேந்திரன் வேலை அறிக்கையையும், பொருளாளர் மு.காசி வரவு-செலவு அறிக்கையை சமர்பித்தார்.
சம்மேளன பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் துவக்கி வைத்தும், சம்மேளன தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் நிறைவு செய்து பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சிலம்பரசன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.
பீடித் தொழிலை நம்பி வாழும் 1 கோடி தொழிலாளர்களுக்கு மாற்று வேலைக்கு உத்தரவாதம் இல்லாமல் பீடி தொழிலை நலிவடைய செய்யும் கொள்கைகளை கைவிட வேண்டும். பீடி மீது விதித்துள்ள 28 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், ஜிஎஸ்டி வரியில் இருந்து பீடி தொழிலாளர்களின் சேமநல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.