districts

img

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவல பாதையில் மக்களுக்கு அடிப்படை வசதிகள்

திருவண்ணாமலை, ஏப். 21- திருவண்ணாமலையில் செவ்வா யன்று  (ஏப்.23) தொடங்கவுள்ள சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலப் பாதையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மற்றும் தூய்மைப் பணி யினை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை நகரில் நடை பெறும் முக்கிய விழாக்களில் சித்ரா பவுர்ணமியும் ஒன்றாகும். எஇந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி செவ்வாய் 23ந் தேதி அதிகாலை 4.21 மணிக்கு தொடங்கி புதன்கிழமை மறு நாள் (24ந் தேதி) அதிகாலை 5.54 மணிக்கு நிறைவடைகின்றது. அதை யொட்டி 23ந் தேதி இரவு கிரிவலம் செல்லலாம்   என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளை விட சுமார் 40 லட்சம் மக்கள் கிரிவலம் செல்ல வாய்ப்புள் ளது. அதையொட்டி மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து துறை அதிகாரிகள் சித்ரா பவுர்ணமி விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர். ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு  சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்லும் மக்களுக்கு  இடை யூறாக திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலை சுற்றியுள்ள மாடவீதி, உள்மாடவீதி மற்றும் 14 கி.மீ. தூரமுள்ள கிரிவலப்பாதையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.  பக்தர்களுக்கு குடிநீர் வழங்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம்  திருவண்ணாமலை கிரிவல பாதை யிலுள்ள அடிஅண்ணாமலை ஊராட்சிக்குட்பட்ட அபாய மண்டபம் அருகே நெடுஞ்சாலை துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி யையும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளும் பணியினையும் மாவட்ட ஆட்சியர் ஞாயி றன்று (ஏப்,22)   நேரில் சென்று பார்வை யிட்டார். மேலும் அடிஅண்ணாமலை பகுதியில்  நெடுஞ்சாலை துறை மூலம் பக்தர்களுக்காக குடிநீர் வழங்கும் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தையும் ஆய்வு மேற்கொண்ட அவர், சித்ரா பவுர்ணமி அன்று பக்தர்களுக்கு தங்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத் தினார்.   மேலும் கிரிவல பாதையிலுள்ள வேங்கிக்கால் அடிஅண்ணாமலை அத்தியந்தல் ஆணாய்பிறந்தான் ஆகிய ஊராட்சி பகுதிகளிலுள்ள பொது க்கழிப்பிடங்களில் பராமரிப்பு செலவுக் காக ரூ.5க்குமேல் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு அறிவுறுத்தினார்.  மேலும் மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக்கு பின்னர் கிரிவலப்பாதையில் நடைபாதையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த தரைக்கடைகள், தள்ளு வண்டிகள், கடைகளின் முன்பு உள்ள தகர கொட்டகைகள் போன்றவை அகற்றப்பட்டது. மேலும் கிரிவலப் பாதையில் டீக்கடை, ஓட்டல் உள்ளிட்ட கடைகள் முன்பு நடைபாதையில் வைக்கப்பட்டு இருந்த சேர், பென்ச் போன்றவை கடைக்குள் போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும்  நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்க ப்பட்டு இருந்த கடைகளும் அகற்றப் பட்டது. அப்போது சில வியாபாரிகள் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதனால் ஆங்காங்கே சிறிது பரபரப்பு ஏற்பட்டது.