சென்னை,ஆக.25-
திருவொற்றியூர் மேட்டு காமராஜர் தெருவை சேர்ந்தவர் அருண் (31) தனியார் உரம் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.50 ஆயிரம், ரூ.25ஆயிரம் என அடுத்தடுத்து பணம் எடுக்கப்பட்டதாக செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் தனது வங்கிகணக்கை சரிபார்த்த போது ரூ.75 ஆயிரம் மாயமாகி இருந்தது. பணம் எடுக்கப்பட்ட போது செல்போனிற்கு ஓ.டி.பி. எண் வரவில்லை என்று கூறப்படுகிறது. மர்ம நபர்கள் நூதன முறையில் ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அருண் காலடிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.