districts

img

பான்பரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் காலமானார்

கடலூர்,டிச.23- கடலூர் பான்பரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவராக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பு வகித்து வந்தார் அருணாச்சலம். அவர் சனிக்கிழமையன்று (டிச.23) காலமானார். அவருக்கு வயது 76.  கம்மியன் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு பொதுமக்கள், வியாபாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், பான்பரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் நடராஜன், நிர்வாகிகள் சேகர், எஸ்.கே.பக்கிரான், ராஜா, உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.