செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று (ஏப்.21) ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிக்கு தடை மற்றும் மீண்டும் மஞ்சப் பை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் துவக்கி வைத்தார். சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் முனைவர் வாசுதேவன் உதவி பொறியாளர் செந்தில்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.