districts

img

ஆயிஷா இரா.நடராசனின் 150- வது நூல்: வெ.இறையன்பு இன்று வெளியிடுகிறார்

கடலூர், டிச.18- சாகித்ய அகாடமியின் சிறார் இலக்கிய (பால சாகித்ய) விருதாளர் ஆயிஷா இரா.நட ராசன் எழுதிய 150-வது நூல் வெளியீட்டு விழா செவ்வாயன்று (டிச.19) கடலூரில் நடை பெறுகிறது. இதில், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர்  வெ.இறையன்பு கலந்து கொள்கிறார். கருப்பு யுத்தம், ஆயிஷா, ஒரு தோழியின் கதை, பாலித்தீன் பைகள், வகுப்பறை கூண்டை விட்டு வான்வெளியை நோக்கி, வரலாறு மறந்த விஞ்ஞானிகள், வாங்க அறிவியல் பேசலாம், உள்ளிட்ட 149 நூல்களை ஆயிஷா நடராஜன்  வெளி யிட்டுள்ளார். அவரது 150 ஆவது நூலான ஆங்கில மற்றும் தமிழ் அகராதி, கழுதை வண்டி, (தமிழ் மற்றும் ஆங்கிலம்) சிறார் நூலான பண்ணை யுத்தம், மற்றும் நூலகலாஜி, (கட்டுரை) ஆகிய ஐந்து நூல்கள் வெளி யிடப்படுகிறது. இந்த விழாவை கவிஞர் பால்கி மற்றும் கவிஞர் ஜோ.கௌதமன் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள். நூல்களின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு சாகித்ய அகாடமி யின் பொதுக்குழு உறுப்பினர் பேரா பூபதி பெரியசாமி, புதுதில்லி விக்யான் பிரச்சார் அமைப்பு சுட்டி. கணேசன், கடலூர் இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.கண்ணன்,  குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் இளந்திரையன், நூலக வாசகர் வட்ட தலைவர் தணிக்கை யாளர் குமரகுரு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.  கடலூர் கிருஷ்ணசாமி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர்.கி. இராஜேந்திரன் தலைமை வகிக்கிறார். விழாவில் மாநில வணிக வரி அலுவலர் ஜனார்த்தனன் கலந்து கொள்கிறார். நூலாசிரியரை செல்வி ஐஸ்வர்யா அறிமுகம் செய்து வைக்கிறார். புத்தக வெளியீட்டு விழாவில் மாலா நடராசன் வரவேற்புரை நிகழ்த்த புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பக மேலாளர்  நாக ராஜன் நன்றி கூறுகிறார். இந்த விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் கேட்டுக்கொண்டுள்ளார்.