உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை புற்றுநோய் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி முதல்வர் எ.தேரணிராஜன் தலைமையில் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் புற்றுநோய் கதிர்வீச்சியல் துறைத் தலைவர் டி.என்.விஜயஸ்ரீ, புற்றுநோய் மருத்துவ இயல் துறைத் தலைவர் கங்காதரன், புற்றுநோய் அறுவை சிகிச்சையியல் துறைத் தலைவர் கோபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.