districts

img

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சிதம்பரத்தில் விழிப்புணர்வு பேரணி

சிதம்பரம், மே. 12- சிதம்பரம் இருப்பு பாதை காவல்துறை சார்பில்  சிதம்பரம் ரயில் நிலையத் தில் போதைப் பொருள் தடுப்பு, குழந்தைகள் மற்றும்  பெண்கள் பாலியல் வன்கொடுமை,  ரயில் பயணி கள் விபத்து குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப் புணர்வு பேரணி  நடைபெற்றது. இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்சிசி இயக்கத்தின் மேஜர். கன கராஜ், முனிராஜா, தேசிய  மாணவர் படை இணை அலு வலர் ராஜா, மற்றும் பிராங் கிளின் ஜோசப், பழனியப் பன், சிதம்பரம் ரயில் நிலைய மேலாளர் சந்திர மோகன், வணிக மேலாளர் ரிஷிகேஷ், சிதம்பரம் இருப்பு பாதை காவல் ஆள் வாளர் அருண்குமார் சார்பு ஆய்வாளர் சேகர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள், பல்கலைக் கழக என்சிசி மாணவர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியில் பொதுமக் களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பாலி யல் வன்கொடுமைக ளையும், ரயில் விபத்தையும், போதைபொருட்களை தடுப்பது  குறித்து கைகளில் பதாகைகள் ஏந்தி,  துண்டுப்  பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத் தினார்கள்.