districts

img

சிதம்பரம் நகராட்சி பள்ளிகளில் விழிப்புணர்வு ஓவிய போட்டி

சிதம்பரம், செப். 26- பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனம் நிறுவிய நாளான அக்டோபர் 1 ஆம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிதம்பரம் நகரத்தில் உள்ள வடக்கு வீதி நகராட்சி மற்றும் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஓவிய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை மானசந்து நகராட்சி பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயக்கொடி தொடங்கி வைத்தார். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கடலூர் மாவட்ட உதவி பொது மேலாளர் ஜெயலால் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பென்சில், ரப்பர், சார்ட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். இந்த போட்டியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு டிஜிட்டல் உலகில் அவர்களின் மனதிற்கு ஏற்ற வகையில் ஓவியங்கள் வரைந்தனர். ஓவியப் போட்டியில் நல்ல முறையில் வரைந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.