விழுப்புரம் ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் சுற்றுச்சூழலை பாதிக்கும் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டை தவிர்த்து மஞ்சள் துணிப்பையை பயன்படுத்த வலியுறுத்தி இளம் செஞ்சிலுவை சங்கம் (ஜேஆர்சி) மாவட்ட அமைப்பாளர் ம.செல்லத்துரை தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா, கல்வி அலுவலர் பி.சுந்தரமூர்த்தி, ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் முனைவர் ம.பாபுசெல்வதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.