சென்னை, நவ.17- சிமாட்ஸ் பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சாதனைகளை அங்கீகரித்து பாராட்டும் வகையில் ‘அக்னிடோ 2022’ என்ற விருதி வழங்கி கவுரவித்தது. இந்நிகழ்ச்சியில் கடந்த 2021-22–ம் கல்வியாண்டில் கல்வி, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, நேரம் தவறாமை ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 550 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் டாக்டர் டி. ராமசாமி, சென்னை காப்புரிமை அலுவலகத் தலைவர் எஸ். தங்கபாண்டியன், டாக்டர் அம்பேத்கர் இன்ஸ்டிடியூட் ஆப் புரடக்டிவிட்டி இயக்குநர் ஸ்ரீநிவாசலு, சிமாட்ஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் என்.எம்.வீரையன், துணை வேந்தர் சதாராம் சிவாஜி, கல்வியியல் துறை இயக்குநர் தீபக் நல்லாசாமி, இயக்குநர் ரம்யா தீபக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.