districts

img

திருவொற்றியூர் அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு விருது

சென்னை, மார்ச் 7- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்ட லம் 4ஆவது வார்டு ராமநாத புரத்தில் சென்னை நடு நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துசெல்வி, அந்தப் பள்ளியின் மேலா ண்மைக்குழு ஒத்துழைப்பு டன் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 600ஆக உயர்ந்தது. மேலும் தேசிய திறனாய்வு போட்டியில் 14 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உயர் கல்விக்கு உதவி பெற்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல மாணவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று வருகின்ற னர். மாநில அளவில் நடை பெற்ற போட்டி தேர்வில் முதல்வரிடம் பரிசு பெற்ற னர். மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக இந்த பள்ளி தேர்வு பெற்றது. மேலும் மாநிலத்தில் சிறந்த 10 பள்ளிகளில் ஒரு பள்ளி யாக இந்த பள்ளியும் தேர்வு செய்யப்பட்டது. தற்போது தமிழில் சிறந்த தலைமைத்துவம் பெற்ற தலைமை ஆசி ரியர்கள் 100 பேர் தேர்வு செய்யப்பட்டதில் ஒரு வராக இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துசெல்வி தேர்வாகி யுள்ளார். திருச்சியில் நடைபெற்ற விழாவில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், சிறந்த தலைமைத்துவம் மிகுந்த தலைமை ஆசிரியருக்கான விருதையும், 10 லட்ச ரூபாயையும் முத்து செல்விக்கு வழங்கினார்.