districts

img

விழுப்புரத்தில் எ.வ.வேலு இறுதிக்கட்ட பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி, ஏப்.18 - விழுப்புரம் மக்களவைத்  தொகுதி விசிக வேட்பாளர் து.ரவிக்குமார் ஆதரித்து அமைச்சர் ஏ.வ.வேலு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில்  புதனன்று இறுதிகட்ட பிரச்சாரம் செய்தார். உளுந்துர்பேட்டையில் பேசிய அமைச்சர், திராவிட அரசு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண் டும் என்பதை உறுதி செய் கிற சமதர்ம அரசு. இளைஞர் கள் வேலை வாய்ப்பு பெரும்வகையில் உளுந் தூர்பேட்டையில் சிப்காட் உருவாக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் நான் காண்டு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்கு என்ன செய்தார். இன்றளவும் எம்ஜிஆர், ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங் களை வைத்து தான் விளம்பரம் செய்து வருகி றார். ஏனென்றால் எடப் பாடிக்கு அவரது கட்சி யில் இருக்கும் எம்எல்ஏக் களை காப்பதே பெரும் தலைவலியாக இருந்தது. எங்கு அவர்கள் சிதறி சசிகலாவிடமோ, திமுக விடமோ சென்றுவிடு வார்கள் விழிபிதுங்கி நிற்கிறார். கிட்டத்தட்ட கோழி  அடைகாப்பது போல தனது பதவி காலம் முழுவ தும் சட்டமன்ற உறுப்பினர் களை காத்து வந்ததால் அவருக்கு நாட்டைப் பற்றி யும் மக்களைப் பற்றியும் சிந்திப்பதற்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. இவர்தான் இப்படி என் றால் இவரது அண்ணன்  மோடியும் சொன்ன வார்த் தையை காப்பாற்றவில்லை. எடப்பாடி பழனிச்சாமி எந்த ஒரு இடத்திலும் மாநில  உரிமைக்காக குரல் கொடுக்க முடியாதவராய் தான் இருந்தார். ஜிஎஸ்டி வரி போடப்படுவதாக கலை ஞர் ஆட்சி காலத்தில் கூறப் பட்டபோது வரி விதிப்பது மாநில உரிமை என போர் கொடியை உயர்த்தினார். அவரை தொடர்ந்து முதல் வர் ஜெயலலிதாவும் வரி விதிப்பது எங்கள் மாநில உரிமை அதை விட்டுத் தர மாட்டோம் என அழுத்தமாக கூறினார். ஆனால் எடப் பாடி கையெழுத்து போட்டு விட்டு மக்களை திண்டாட வைத்து விட்டார். இப்போது ஜிஎஸ்டி வரியினால் மக்கள்  சக்கையாக பிழியப்படு கின்றனர். எதற்கெடுத்தா லும் வரி என மக்களை வாட்டி வதைக்கிறது. இது  அனைத்தையும் போக்கி  மக்களுக்கு நல்லாட்சி தந்திட இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். மறவாமல்  நமது வேட்பாளர் ரவிக்கு மாருக்கு பானை சின்னத்தில்  வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் எனக் கூறினார்.