வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக சேர்வதற்கான கட்டணம் ரத்து செய்யப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கும், பயிற்சி காலத்தில் உதவித்தொகை வழங்குவதற்கும் அரசாணை வெளியிடக் கோரி புதனன்று (நவ.2) சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் வெளிநாட்டு பிரிவுச் செயலாளர் ம.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொருளாளர் மோகனா உள்ளிட்டோர் பேசினர்.