திருவண்ணாமலை,ஜூலை 23-
திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி வட்டம்,மங்கலம் மாமண்டூர் கூட்டு சாலையில், தனியார் கடையின் முன் கற்களை கொட்டி, கடையை அபகரிக்க முயற்சிப்பதாக, கடையின் உரிமையாளர் ஹரிதாஸ் கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது,
வந்தவாசி அடுத்த மங்கலம் மாமண்டூர் கூட்டு சாலையில், எனக்கு சொந்தமான கட்டி டம் உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்ற போது, தேர்தல் முன்விரோதம் காரண மாக, கட்டிடத்தின் பக்கத்து வீட்டை சேர்ந்த மேத்தா ரமேஷ் மற்றும் அவரின் மனைவி யும், ஊராட்சி மன்ற தலைவருமான கதீஜா மற்றும் அசோக்குமார் ஆகியோர் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர்களை நிர்பந் தப்படுத்தி பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்துள்ளனர்.
எனது கட்டிடத்தின் நில வரைபடம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் வழக்காடி பெற்றிருந்த வழிகாட்டுதல் ஆணையை கூட, ஊராட்சி மன்ற தலைவர் கதீஜா ஏற்காமல், அவருடைய கணவர் மேத்தா ரமேஷ் மற்றும் அசோக்குமார் ஆகி யோரை ஏவி விட்டு எனது கட்டிடத்தின் கட்டு மான பணிகளை தொடர்ந்து நடத்த விடா மல் இடையூறு செய்து வருகின்றனர்.
எனது கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து கடை நடத்த முயன்றவர்களை அச்சுறுத்தி விரட்டிவிட்டனர். மேலும், மாமண்டூரை சேர்ந்த சங்கர் மகன் ராஜசேகர் உடன் இணைந்து எனது சொத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு கொலை மிரட்டல் விடுத் தனர், இந்நிலையில் எனது குளிர்பான கடை முன்பு கடந்த செவ்வாய் கிழமை நள்ளிரவு டிப்பர் லாரியில் ஜல்லி கற்களை கொண்டு வந்து மலைபோல் கொட்டிவைத்துள்ளனர். கடையை திறக்கமுடியாமல் செய்து எனது சொத்தை அபகரிக்க முயற்சி செய்துள் ளனர். அதன்மீது உரிய நடவடிக்கை எடுத்து நான் கடை திறக்க வகைசெய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.