districts

img

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி: 4பேர் கைது

கடலூர், ஏப்.24- குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவத்தில் 4 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை அருகே அம்பேத்கர் சிலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு புதனன்று அதி காலையில் இருசக்கர வாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள் மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி சிலையை நோக்கி வீசி உள்ளனர். அப்பொழுது அது அம்பேத்கர் சிலையின் மீது படாமல் அருகில் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. சத்தம்கேட்டு வந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரி வித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சார்ந்த 4 பேரை பிடித்து  குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் விசிகவினர் குவிந்தனர். மர்ம நபர்களை கைது செய்ய கோரியும் -அம்பேத்கார் சிலைக்கு பாது காப்பு அளிக்க கோரியும் விசிக கடலூர் துணை மேயர் தாமரைச்செல்வன் தலை மையில் அம்பலவாண பேட்டை கிரா மத்தில் சிலைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அங்கு கூடியவர்கள்  அம்பேத்கர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து சமுக விரோதிகளை கைதுசெய்ய கோரி முழக்கமிட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் தற்பொழுது பரபரப்பு நிலவி வருகிறது.