districts

2 பெண்கள் உள்பட 5 பேரை கொல்ல முயற்சி: ஆவடி அருகே 2 ரவுடிகள் கைது

அம்பத்தூர், ஏப்.26- ஆவடி அருகே அடுக்கு மாடி குடி யிருப்பில் மதுப்போதையில் 2 பெண்கள் உள்பட 5 பேரை வெட்டி கொல்ல முயன்ற 2 ரவுடிகளை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அம்பத்தூர் அடுத்த திருமுல்லை வாயல், கணபதி நகர், கணபதி தெருவில் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடி யிருப்பில் செங்கல்பட்டு, காரைவாக்கம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (22) திருப்போரூர், ஸ்ரீகுண்டம் பகுதியைச் சேர்ந்த அவினாஷ் (27) மற்றும் தாம்பரம் அருகே படப்பை பகுதியைச் முத்துக்குமார் (26) உள்ளிட்டோர் வருகின்றனர். இந்த நிலையில் வியாழக்கிழமை மேற்கண்ட 3 இளைஞர்களும் மதுப்போதையில் குடி யிருப்பில் உள்ள பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசி உள்ளனர். இதை யடுத்து அங்கு குடியிருக்கும் செல்வம் மனைவி சீதாலட்சுமி (38), அவரது மகன் காமேஷ் (17) ஆகியோர் கண்டித்துள்ள னர். அப்போது போதையில் இருந்த 3 இளைஞர்களும் தாய், மகனை கத்தியால் வெட்டியுள்ளனர். இதைப் பார்த்த அங்கு வசிக்கும் சந்திரலேகா (38) அவரது மகன் விஜி (20) மற்றும் கல்லூரி மாணவர் காமேஷ் (19) ஆகியோரும் ஓடி வந்து தடுத்துள்ளனர். அப்போது அவர்கள்  3பேரையும்  இளைஞர்கள் கத்தியால் வெட்டியுள்ளனர். இதனால் குடி யிருப்பில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் குடியிருப்புவாசிகள் திரண்டு வரவே, போதை இளைஞர்கள் கத்தியுடன் அங்கி ருந்து தப்பி ஓடிவிட்டனர். இதன் பிறகு,  குடியிருப்புவாசிகள் படுகாயம் அடைந்த  5 பேரையும் மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவல் அறிந்து திருமுல்லைவாயல் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில்  தாக்குதலில் ஈடுபட்ட அவி னாஷ், விஷ்ணு ஆகியோர் மீது செங்கல்பட்டு மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும், இவர்கள் இருவரும் ரௌடி பட்டியலில் இடம் பெற்று இருப்பதும் தெரியவந்தது.  புகார் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் போலீஸார் கொலை முயற்சி வழக்கு ரவுடிகள்  அவினாஷ், விஷ்ணு ஆகிய இருவரை யும் வெள்ளிக்கிழமை கைது செய்த னர். பின்னர் அவர்களை அம்பத்தூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தலைமறை வாகியுள்ள முத்துக் குமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.