நாமக்கல், ஏப்.29- நாமக்கல் அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். இதற்கு நீதி கேட்டு போராடும் விவ சாயிகளின் உடமைகளை சேதப்படுத்து வர்கள் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டத்திற்குட்பட்ட கரப்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் விவே கானந்தன். இவரின் மனைவி பட்ட தாரியான நித்தியா (28). இவர், காலை யில் விவசாய கூலி வேலையும், மாலையில் ஆடு,மாடு மேய்க்கும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த மார்ச் 11 தேதியன்று ஆடு மேய்க்க சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடிப்பார்த்தபோது, வழக்கமாக ஆடு மேய்க்கச் செல்லும் பகுதியில், முட்புதரில் கழுத்து, மார்பில் நகக்கீறல்கள் மற்றும் காயங்களுடன் பாலியல் வன்கொடுமைக்கு பின் படுகொலை செய்யப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
முழுமையான விசாரணையை மேற்கொள்ளாத காவல்துறையினர், 17 வயது சிறுவனை குற்றவாளி என கைது செய்துள்ளனர். இது அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் சந்தேகத்தை உருவாக்கி உள்ளது. இத்தகைய கொடூரமான பாலியல் வன்கொடுமையால் படுகொலையை ஒரு நபரால் செய்திருக்க முடியாது. இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து உண்மை குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும். சிபிசிஐடி விசா ரணைக்கு மாற்ற வேண்டும். அப்பாவி இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது என கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்.14 தேதியன்று அதிகாலையில் விவ சாயி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, வீடு தீக்கிரை யாக்கப்பட் டது. அதே நாளில், இப்பகுதியில் வசிக்கும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கிளை தலைவரும், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர்களில் ஒருவருமான குழந்தைவேலு வீட்டின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக அவை வெடிக்கவில்லை. இது குறித்து காவல்துறையில் புகார் தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், ஏப்.28 தேதியன்று இரவு குழந்தைவேல் தோட்டத்தில் உள்ள பவர் டில்லரை தீ வைத்து எரித்தும், பல லட்சம் மதிப்புள்ள நீர் பாசன குழாய் இணைப்புகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இப்பகுதியில் 24 மணி நேரமும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ஆனால், குழந்தைவேலு காவல் துறையினருக்கு தகவல் சொல்லிய பின்னரே அவர்களுக்கு தெரியவந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு உடனடி யாக தலையிட்டு, பாலியல் வன்கொடு மையால் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க, சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும். பெண்ணின் மரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எதிர்கால வாழ்வினை பாதுகாக்க உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
காவல்துறை பாதுகாப்பு உள்ள பகுதிகளில் தொடர்ந்து தீவைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு, விவ சாயிகளின் பாசன குழாய்கள் சேதப்படுத்தப்படுவது போன்ற தொடர் சம்பவங்கள் நடைபெறுவது காவல்துறையினர் மீது பொதுமக்க ளுக்கு சந்தேகத்தையும். அச்ச உணர்வையும் உருவாக்கி உள்ளது என்பதை கவனப்படுத்த விரும்பு கிறோம். எனவே காவல்துறையில் உள்ள ஒரு சிலர் மேற்கண்ட குற்ற செயலில் ஈடுபடும் சமூக விரோதி களுக்கு ஆதரவாக இருக்கிறார்களா என்ற சந்தோகம் எழுந்துள்ளது. தீவைப்பு ,பெட்ரோல் குண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நஷ்ட ஈடு கிடைக்கவும், அச்சத்தின் பிடியில் உள்ள விவ சாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்பகுதியில் அமைதி நிலைவிட வருவாய்த் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முன்னதாக, விவசாயி குழந்தைவேல் தோட்டத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு குழந்தைவேலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பெரு மாள், கே.தங்கமணி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆதிநாராயணன், வட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் ஆறுதல் கூறி நம்பிக்கை அளித்தனர்.