சிதம்பரம், ஏப்.5- மதக்கலவரத்திற்கு வித்தி டும் துண்டு பிரசுரத்தை விநி யோகித்த பாஜக, ஆர்எஸ்எஸ் வகை யராக்களிடம் கேள்வி எழுப்பிய திமுக கவுன்சிலர் சி.கே.ராஜன் கடுமையாக தாக்கப்பட்டார். இதுகுறித்து விவரம் வருமாறு, சிதம்பரத்தில் தேசிய வாக்காளர் பேரவை என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்பான சமுதாய நல்லிணக்க தொடர்பு அமைப்பு தலை வரான குரு சுப்பிரமணியன் தலைமையில் 3 பேர் கொண்ட கும்பல் விளங்கியம்மன் கோயில் தெருவில் பாஜகவிற்கு ஆதரவாக மதக்கலவத்தை ஏற்படுத்தும் வகையில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் நூற்றுக்கணக்கான கோயில்களை இடித்தவர்களுக்கா? அல்லது இடிக்கப்பட்ட நமது பெருமை மிகுந்த கோயில்களை மீட்டு அற்புதமாய் கட்டியவர்களுக்கா? ஆட்சி பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர்களுக்காக? உங்கள் வாக்கு என 24 வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வலியுறுத்தி வீடு வீடாக சென்று வழங்கியுள்ளனர். அப்போது விளங்கி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் திமுக 10-வது வார்டு உறுப்பினர் சி .கே ராஜன் என்பவர் ஏன் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் துண்டு பிரசுரம் வழங்குகிறீர்கள். யாரிடம் அனுமதி பெற்றீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்தவர்களும் தேசிய வாக்காளர் பேரவை நிர்வாகிகளும் திமுக வார்டு உறுப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் அவரை கடுமையாக தாக்கினர். இதனை பார்த்த அருகில் இருந்த சிதம்பர நகராட்சி துப்புரவு பணியாளர் திலகவதி என்ற பெண் தடுத்தபோது அவரையும் தாக்கியுள்ளனர். இதனை அறிந்த திமுகவினர் சம்பவ இடத்திற்கு கூட்டமாக வந்தனர். அப்போது வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பின ருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்ததாக திமுக நகர்மன்ற உறுப்பினர் சி.கே.ராஜன், துப்புரவு பணியாளர் திலகவதி, ஆர்.எஸ். எஸ். அமைப்பை சேர்ந்த குரு சுப்பிர மணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துண்டு பிரசுரம் வழங்கிய 3 பேரை சிதம்பரம் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதனையெடுத்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒருபுறம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அனு மதியின்றி துண்டுப் பிரசுரம் வழங்கி மதக் கலவரத்தையும் ஏற்படுத்தி விளக்கம் கேட்ட நகர்மன்ற உறுப்பினர் மற்றும் துப்புரவு பணியாளரை தாக்கிய குற்ற வாளிகளை கைது செய்யுமாறு காவல்நிலையம் முன்பு திரண்டனர்.இதற்கு எதிர்ப்பு தெரி வித்து பாமக, பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் இரு பிரிவினரையும் தடுத்து தனித்தனியே அனுப்பி வைத்தனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சனிக்கிழமை சிதம்பரம் புறவழி சாலையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார். இந்த நிலையில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக, ஆர்எஸ்எஸ் வகையராக்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக திமுகவினர் குற்றம்சாட்டினர்.