districts

img

அடடே மனோகர் காலமானார்

சென்னை, பிப்.28-  பழம்பெரும் நாடக, சின்னத்திரை நடிகரும், கதாசிரியருமான அடடே மனோகர் சென்னையில் காலமானார். நடிகர் மனோகர் 3 ஆயிரத்து  500க்கும் மேற்பட்டமேடை நாடகங் களில் நடித்துள்ளார். அதில் ஏராளமான  நகைச்சுவை நாடகங்களை இவரே எழுதி, இயக்கி நடித்திருக்கிறார். தனியார் நிறுவனத்தில்,  பணியாற்றிக் கொண்டே, நாடகத்திலும்  திரைப்படங்களிலும் நடித்து வந்தார் மனோகர்.  மேலும், பல தொலைக்காட்சி மற்றும் வானொலி  நாடகங்களில் தனதுமுத்திரையை பதித்தார். 1980களில் இவர் எழுதி நடித்த  தொலைக்காட்சித்தொடரான  ‘அடடே  மனோகர்’  இவருக்கு இந்தப் பெயரைப் பெற்றுத்தந்தது.