districts

தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம்

கூடுவாஞ்சேரி, செப். 5- நெல்லிக்குப்பம் அடுத்த  குமிழி, மேட்டுப்பாளை யத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கும் செங்கல்பட்டை அடுத்த மெய்யூரைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும்  திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்து இருந்தனர். அவர்களது திருமணம் திருப்போரூரை அடுத்த கொட்டுமேடு கிராமத்தில் உள்ள தனியார் திருமண  மண்டபத்தில் திங்களன்று (செப்.5) நடைபெற இருந்தது. இதையொட்டி ஞாயிறு மாலை திருமண  வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவு 11 மணி வரை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமகன் சதீஷ்குமார், மணமகளுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். பின்னர் சதீஷ்குமார் மணமகன் அறைக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் இன்று காலை திருமணத்திற்கு சடங்குகள் செய்வதற்காக மணமகன் அறைக்கு சென்று  சதீஷ்குமாரை அழைத்து வர உறவினர்கள் சென்ற னர். ஆனால் சதீஷ்குமார் அங்கு இல்லை. அவருடன் இருந்த நண்பர்களும் மாய மாகி இருந்தனர். மணமகன்  சதீஷ்குமார் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. இதனால் மணப்பெண்ணும், திருமணத்துக்கு வாழ்த்த வந்த உறவினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சதீஷ்குமாரை தேடியும்  கண்டுபிடிக்க முடிய வில்லை. அவரது செல்போ னும் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டு உள்ளது. இதனால் புதுமண ஜோடியை வாழ்த்த வந்த உறவினர் கள் கவலையுடன் திரும்பி னர். திருமணம் நின்று போனதால் திருமண மண்ட பம் களை இழந்தது. மணமகளுக்கு ஆறுதல் கூற முடியாமல் உறவினர்கள் சோகம் அடைந்தனர். திருமண மண்டபத்தில் மணமகன் சதீஷ்குமாருக்கு சீதனமாக கொடுப்பதற்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. மணமகன் ஓட்டம்  பிடித்து இருப்பது குறித்து  திருப்போரூர் காவல்நிலை யத்தில் புகார் செய்யப் பட்டது. போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

;