சென்னை, ஏப். 8 - வாரிய வீடுகளுக்கு கிரைய பத்திரத்தை எஸ்டேட் அலுவலகங்கள் வாயிலாக வழங்கும் முறையை தொடர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் (எம்யுடிபி), தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் (டிஎன்யுடிபி) ஆகியவற்றின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகள் மற்றும் மனை பிரிவுகளில் உள்ள சம்பந்தப்பட்ட ஒதுக்கீடுதாரர்களுக்கு, வாரியத்தின் தலைமையிடத்தில் கிரைய பத்திரம் வழங்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பொது மக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் 2022 ஆகஸ்ட் மாதம் முதல் தகுதியான ஒதுக்கீடுதாரர்களுக்கு வசிக்கும் திட்டப்பகுதி எஸ்டேட் அலுவலகத்திலேயே கிரைய பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, நிர்வாக காரணங்களை முன்வைத்து மீண்டும் வாரிய தலைமையிட அலுவலகத்தில் மட்டும் கிரைய பத்திரம் வழங்கும் நடைமுறையை கொண்டு வர உள்ளதாக தெரிய வருகிறது. பொதுமக்க ளின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ள நடைமுறையே தொடர வேண்டும். வாரிய தலைமை அலுவல கத்தில் மட்டும் கிரையபத்திரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட் டுள்ளது.