districts

img

பிராட்வே பேருந்து நிலையத்தில் பன்னோக்கு வணிக வளாகம்

சென்னை, அக். 28 - பிராட்வே பேருந்து நிலையத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு வணிக வளாகத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்கான தீர்மானத்திற்கு சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டம் வெள்ளியன்று (அக்.28) ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்தக்  கூட்டத்தில் 70 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதன்படி, மாநகராட்சியின் கீழ் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், 19 நகர்ப்புற சமுதாய நலவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. ஒரே பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட மையங்கள் செயல்படும் போது அவற்றின் பெயரை அழைப்பதில் உள்ள சிரமத்தை தவிர்க்க 37 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங் கள், 5 நகர்ப்புற சமுதாய நலவாழ்வு  மையங்களின் பெயர்கள் மாற்றப் படும். பெருமளவு குப்பைகளை உரு வாக்குபவர்களிடம் இருந்து குப்பை களை பெற்று மறுசுழற்சி செய்ய 40 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நிறுவனங்களை அனுமதிக்கப்படும். கொசஸ்தலை ஆறு வடிநில பகுதி யில் மேற்கொள்ளப்படும் ஒருங்கி ணைந்த மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு மாநகராட்சியின் பங்குத்தொகையாக 750 கோடி ரூபாய் வழங்க வேண்டும். இந்த தொகையை டிபிட்கோ நிறுவனத்திடமிருந்து கடனாக வாங்கப்படும். கல்வி நோக்கத்திற்காக பயன் படுத்தப்படும் தனியார் கல்வி நிறுவன கட்டிடங்கள் மற்றும் அரசு உதவி  பெற்று இயங்கும் கல்வி நிறுவன கட்டிடங்கள், சுயநிதி படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவன கட்டிடங்க ளுக்கு, முந்தைய தெருக்குடியிருப்பு கட்டணத்தில் 1.6 மடங்கு என சொத்து  வரி வசூலிக்கப்படும்.
372 இடங்களில் கழிவறைகள்
மண்டலம் 5, 6 மற்றும் மெரினா கடற்கரை அமைந்துள்ள மண்டலம் 9  ஆகிய மூன்று மண்டலங்களில் 372  இடங்களில் ரூ. 430 கோடி மதிப்பில்  தனியார் பொது கழிப்பிடங்களை அமைத்து, 8 ஆண்டுகள் கட்டணம்  வசூலித்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது. பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிமாக 74வது வட்டம், சந்திரயோகி சமாதி தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் செயல்படும்.