districts

திருப்பூர்: திருநம்பியை மணந்த தோழி பெற்றோர் எதிர்ப்பால் காவல் நிலையத்தில் தஞ்சம்

திருப்பூர், டிச.14- திருப்பூரில் பெண்ணாக இருந்து  திருநம் பியாக மாறியவரை அவரது தோழி திரும ணம் செய்தார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். திருப்பூர், காங்கயம் ரோட்டை சேர்ந்த, 21 வயது பெண், அப்பகுதியில் பனியன் நிறு வனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரு டன், அதே பகுதியை சேர்ந்த 21 வயது பெண்  வேலை செய்து வந்தார். இருவரும் கடந்த,  10 ஆண்டுகளாக பழகி வந்தனர். இந்நிலை யில் சமீபத்தில், இருவரில் ஒருவருக்கு உட லில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. இதுகு றித்து, தோழியிடம் கூறியதால் இருவரும், தனியார் மருத்துவமனையில் ஆலோசனை பெற்றனர். அதன்பின், மருத்துவரின் அறி வுறுத்தலின் பேரில் மாற்றம் ஏற்பட்ட இளம் பெண் சிகிச்சை எடுத்தார். சிகிச்சைக்கு பின்,  இளம்பெண், திருநம்பியாக மாறினார். அதனை தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் கடந்த 8ஆம் தேதி இருவரும் திருமணம் செய்தனர்.  இதையறிந்த, திருநம்பியை மணந்த பெண்ணின் பெற்றோர், அவரை மீட்டு வர  முயற்சி செய்தனர். பெற்றோர் தேடுவதை அறிந்த இருவரும், கடந்த சனியன்று திருப் பூர் தெற்கு காவல் நிலையத்தில் பாதுகாப்பு  கேட்டு தஞ்சமடைந்தனர். இதனையடுத்து இரு குடும்பத்தாரையும் அழைத்து பெற் றோர் விசாரித்து வருகின்றனர்.