கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாகூரில் செவ்வாயன்று(மார்ச்15) சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 600 ஏழை பெண்களின் தாலிக்கு தலா 8 கிராம் தங்கமும், ரூ. 2.08 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவியையும் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர்,வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜெ.கோவிந்தராசன் (கும்மிடிப்பூண்டி), பூவிருந்தவல்லி ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), துரை சந்திரசேகர்(பொன்னேரி), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.