திருவொற்றியூர் 4ஆவது வார்டு சண்முகபுரம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் ஆகியோர் வழங்கினர். இதில் ராமநாதன், பவுல், அரி (திமுக), கே.வெங்கடைய்யா (சிபிஎம்), சரவணன் (கிராம செயலாளர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.