தி சென்னை வினாடி வினா
சென்னை, செப். 1- பெருநகர சென்னை மாநகராட்சியின் வினாடி,வினா போட்டியான “தி சென்னை க்விஸ்”ல் வெல்பவர்க்கு முதல் பரிசு ரூ.7ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு செப் 6 ஆம் தேதி நடைபெறும் வினாடி, வினா போட்டிக்குசென்னையில் பல்வேறு பள்ளிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பதிவுசெய்துள்ளனர். சென்னை திருக்குறள் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி 6, 7, 8, 9ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு அணிகள் பதிவு செய்யலாம். முதல் பரிசு பெறுவோருக்கு ரூ.7ஆயிரம், 2-ம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.5ஆயிரம், 3-ம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.3ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். பங்கேற்பாளர்கள்அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். தலைப்பு: சென்னை திருக்குறள் பங்கேற்பாளர்கள் பதிவு நேரம் மதியம் 1 மணிக்கு நடைபெற்று, வினாடி வினா மதியம்2 மணிக்கு தொடங்கி, மாலை 5.30 மணிக்கு முடிவடைகிறது. பதிவுக்கு https://forms.gle/CiU1WvgQ9jYwkbhn7
புதுச்சேரியில் ரூ.576 கோடியில் சட்டமன்ற வளாகம் துணை நிலை ஆளுநர் ஒப்புதல்
புதுச்சேரி, செப்.1- புதுச்சேரி கடற்கரை சாலையை ஒட்டி பாரதி பூங்கா அருகே சட்டமன்ற வளாகம் உள்ளது. இது பிரெஞ்சு ஆட்சியில் கட்டப்பட்ட பழமையானது. இந்த கட்டிடம் தற்போது சிதிலமடைந்துள்ளது. தலைமை செயலகம் இடநெருக்கடியுடன் கடற்கரை சாலையில் தனியாக இயங்கி வருகிறது. இத்தகைய சூழலில் தலைமை செயலகத்துடன் ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகம் கட்டுவதற்குத் கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து மாநில அரசுகள் முயற்சி எடுத்து வருகின்றன. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு என் ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு புதிய சட்டமன்றம் கட்ட நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் கைலாஷ் நாதன் புதிய சட்டமன்ற வளாகத்தில் ரூ.576 கோடி மதிப்பில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான கோப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இத் தகவலை புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் தெரிவித்தார்.
மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆட்சியரின் அணுகுமுறை அமைய வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
திருவண்ணாமலை, செப்.1- அணுகுமுறையில் மாற்றம் செய்துகொள்ளாத திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியரை வேறு மாவட்டத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என சிபிஎம் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் திரு வண்ணாமலை மாவட்ட கட்சி அலு வலகத்தில் செயற்குழு உறுப்பினர் ஆர்.பாரி தலைமையில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன், ப.செல்வன், எஸ்.ராமதாஸ், அ.லட்சுமணன்,சேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தீர்மானங்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் இந்த மாவட்டத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பொதுமக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்காக தொழிற்சங்க, விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வரும்போது, பொதுவாக சந்திக்க மறுப்பது சிறந்த அணுகுமுறை அல்ல. அதோடு வாழ்நாள் முழுவதும் மக்களின் கோரிக்கைகளுக்காக எவ்வித பிரதி பலனும் எதிர்பாராமல் செயல்பட்டு வரும் இயக்கம் என்கிற முறையில் பணியாற்றி வருகிறோம்.குறிப்பாக மாற்றுதிறனாளிகளின் நியாயமான கோரிக்கை, விவசாய நலன் சார்ந்த, சிறுபான்மை மத நட வடிக்கைகள், தலித் மக்களின் அடிப்படையான தேவைகள் மற்றும், தொழிலாளர்களின் பிரச்சனை களுக்காக மாவட்ட உயர் அதி காரியை சந்தித்து பேசுவதன் வாயிலாக பல பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண முடியும் என நம்பு கிறோம். ஆனால் மாவட்ட ஆட்சியரின் அணுகுமுறை அவ்வாறு இல்லை என்பதை வலியுறுத்துகிறோம். எனவே உயர்ந்த பட்ச பொறுப்பில் இருக்கும் மாவட்ட ஆட்சியரின் இச்செயல் ஏற்க தக்கதல்ல. எனவே, அவரது அணுகு முறையில் மாற்றம் காணவே எங்கள் அமைப்பு கருதுகிறது. அவ்வாறு இல்லையெனில் இம் மாவட்டத்திலிருந்து மாறுதல் செய்ய வேண்டும் என சிபிஎம் திருவண்ணாமலை மாவட்ட குழு சார்பில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.