districts

100 நாள் வேலை கேட்டு பிடிஓ அலுவலகத்தில் மனு

கடலூர், ஆக.12-

     கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கல்குணம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் மாதா கோயில் பகுதி மக்களுக்கு தொடர்ந்து 8 மாதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கப்படவில்லை.

     அந்த பகுதி மக்களுக்கு நூறுநாள் வேலை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளை செயலாளர் ஏ.வாசு தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் எம்.ரட்சக நாதன் சிபிஎம்  ஒன்றியச் செயலாளர் எம்.பிதண்டபாணி உள்ளிட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை கேட்டு மனு கொடுத்தனர். வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் பி.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.