districts

img

பணி நிரந்தரம் கோரி ஆஷா ஊழியர்கள் போராட்டம்

வேலூர், செப். 15- பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா ஊழியர்களின் மாநிலம் தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சுசிலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்தி ரன் துவக்கி வைத்தும், மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் நிறைவு செய்தும் பேசினர். மாவட்டச் செயலாளர் சுமித்ரா, பொருளாளர் ரேகா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி, பொருளாளர் கோவிந்தராஜ் வாழ்த்துரை வழங்கினர். ஆஷா ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 வழங்க வேண்டும், 10 வருடங்கள் பணி முடித்த ஆஷா ஊழியர்களுக்கு கிராம சுகாதார செவிலியர் பதவி வழங்க வேண்டும், பணிக்கொடை மற்றும் பணியின்போது இறப்பு ஏற்பட்டால் ஊழியர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.