districts

முதலமைச்சர் கொடி ஏற்றுவதால் ஆக.15 காலை மீன் பிடிக்க தடை அரசு தலையிட மீன்பிடி தொழிற்சங்கம் கோரிக்கை

சென்னை, ஆக. 12-

       கோட்டையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதலமைச்சர் கொடி ஏற்றுவதால் மீன வர்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  

    முதலமைச்சர் தலை யிட்டு உத்தரவை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை செங்கை மீன்பிடி தொழிற் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது.

    இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.லோ கநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச் சர் கோட்டையில் கொடி ஏற்றுவதற்கு பாதுகாப்பு என்ற பெயரில் கடலுக்குள் மீனவர்கள் மீன் பிடிக்க தடை போடுவது சரியல்ல என்று கூறியுள்ளார்.

    தமிழ்நாடு மீன்துறை உதவி இயக்குநர் மூலம் சுதந்திர தினத்தன்று செயின்ட் ஜார்ஜ் கோட்டை யில் தமிழ்நாடு முதலமைச் சர் கொடி ஏற்ற இருப்பதால் 15.8.2023 அன்று அதிகாலை 4 மணி முதல் 10.30 மணி  வரை சென்னை கடலில் மீன்  பிடிக்க தடை விதித்து சுற்ற றிக்கை அனுப்பியுள்ளார்.

     மீன் வளர்ச்சி, புயல், மழை என்ற காரணங்களால் மீன்பிடி தடையை நியாயப் படுத்தலாம். ஆனால் முதல மைச்சர் கோட்டையில் கொடி ஏற்றுவதற்கும் சென்னை மீனவர்கள் 5 கடல் நாட்டிகல் மைல் வரை மீன் பிடிக்க தடை விதிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.  

    கண்டிப்பாக இந்த உத்தரவு முதலமைச்சர் கவனத்திற்கு சென்றிருக் காது என நம்புகிறோம். எனவே தமிழ்நாடு முதல மைச்சர் தலையிட்டு மீன் துறை அதிகாரிகளின் இந்த  உத்தரவை திரும்ப பெற வேண்டும் என அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.