districts

img

தமிழ்செம்மொழிக்கு ஒதுக்கிய நிதி எங்கே ஆறுமுகநயினார் கேள்வி

கள்ளக்குறிச்சி, ஏப்.17 - கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மலை யரசனை ஆதரித்து சிபிஎம் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சின்னசேலத்தில் நடை பெற்றது சின்னசேலம் பேருந்து நிலையம் அரு கில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஏ.ஆறு முகநயினார் பேசுகையில், தமிழக மக்களின் துயர் துடைக்க வராத பிரதமர் மோடி மக்களவை தேர்தலில் வாக்கு களை மட்டும் வாரிச்சுருட்டப் பார்க்கிறார். இதில் இட்லி, தோசை விருப்ப உணவு என்றும், திருக்குறளை வாசிப்பது, தமிழைப் பற்றி பெருமையாக பேசுவது திருக்குறளுக்கு கலாச்சார மையம் அமைப்பேன் என்று சொல்வது எல்லாம் தமிழ்நாட்டில் எடு படாது.   தமிழ் செம்மொழி வளர்ச்சிக்கும் ஒதுக்கிய நிதியை கூட தராமல் ஏமாற்றிவிட்டு பகல் வேஷம் போடும் மோடிக்கு சரியான முடிவு காத்தி ருக்கிறது என்றார் சிபிஎம்வட்டச் செய லாளர் டி.மாரிமுத்து தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செய லாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட குழு உறுப்பி னர்கள் பி.சுப்பிரமணியன், பி.பழனி, சிபிஎம் வட்ட குழு ஆர்.பாபு, ஏ.பழனிச் செல்வம்,ஏ.முருகேசன், வி. ஆனந்தி, பி.செல்வராஜ், என். ராமச்சந்திரன்,கே.பாலு சாமி,கிளை செயலாளர்கள் எம்.சன்னியாசி, கே. மூக்கன்,வி. சுப்பிரமணியன்,  வட்டக் குழு உறுப்பினர் எம் ராமசாமி ஆகியோர் பேசினர்.