வேலூர், ஆக 12 -
கலைஞர் கருணாநிதி யின் நூற்றாண்டு விழாவை யொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனி யார் வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சி யர் பெ.குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் களுக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சி யர் வழங்கினார். இந்நிகழ்ச்சி யில் அணைக்கட்டு சட்ட மன்ற உறுப்பினர் ஏ.பி.நந்த குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை துணை இயக்குநர் ஆர்.அருண கிரி, மகளிர் திட்ட இயக்கு நர் நாகராஜன், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை உதவி இயக்குநர் க.காந்தி முத்துரங்கம் அரசினர் கலை கல்லூரி முதல்வர் முனைவர் அ.மலர், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் ந.ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.