முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 46 ஊராட்சி மன்றங்களில் ஒன்றியக்குழுத் தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமையில் மா, கொய்யா, ஆலம், பூவரசம், பாதாம், கடுக்காய் உள்ளிட்ட 23 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் துணைத் தலைவர் விமலா முருகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்வதி, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.