districts

img

வேலூரில் 9 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் செயற்கை கால்

வேலூர், ஏப்.29- வேலூரில் 9 பயனாளி களுக்கு ரூ. 8 லட்சம் மதிப்பி லான செயற்கை கால்களை  வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் மாவட்ட ஆட்சியர் வே.ரா. சுப்பு லெட்சுமி வழங்கினார். வேலூர் அரசு மருத்துவ  கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் பிஎம்ஆர் பிரிவு 2004 ல் தொடங்கப்பட்டது. செயற்கை கால் மற்றும் அவயங்கள் துறை 2007 ல் தொடங்கப்பட்டது. இந்த துறையின் மூலம் இதுவரை 1640 செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில்  54 அதி நவீன செயற்கை  கால்கள் வழங்கப்பட்டுள் ளது. மேலும் 37 கால்களை தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மூலமும் மீதி 17 கால்களை முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டம் மூலமாகவும் வழங் கப்பட்டுள்ளது. இத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 9 பயனாளிகளுக்கு ரூ. 8.17 லட்சம் மதிப்பில் செயற்கை கால்களை மாவட்ட ஆட்சி யர் வழங்கினார். இதில் 8  பயனாளிகள் சாலை விபத் தில் கால்களை இழந்த வர்கள், ஒரு பயனாளி புற்று நோயால் பாதிக்கப்பட்டு கால்களை இழந்தவராவார். இந்நிகழ்வின்போது மருத்துவ கல்லூரி முதல்வர் பாப்பாத்தி, மருத்துவ கண்காணிப்பாளர் ரதிதில கம் ஆகியோர் உடனிருந்த னர்.