districts

img

அரசு பள்ளியில் கலைப்போட்டிகள் துவக்கம்

நாமக்கல், ஜன.4- ஆவரங்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கலைஞர் நூற்றாண்டு விழா கலைப்போட்டிகள் துவங்கி யது. நாமக்கல் மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு, அனைத்து அரசு பள்ளிகள், உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா, மற்றும் ஓவியப் போட்டி ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதன்ஒரு பகுதியாக பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைப்போட்டி கள் நடைபெற்றன. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா, ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். இந்நிகழ் விற்கு பள்ளியின் தலைமையாசிரியர் சரஸ்வதி தலைமை வகித்தார். இப்போட்டிகளில் பங்கேற்ற மாணவிகள் கலை ஞர் கருணாநிதியின் உருவப்படங்களை வரைந்தும், அவர் குறித்த கட்டுரைகளை எழுதியும் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர், பள்ளி  மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவி கள் என பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் நடை பெறும் இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவி களுக்கு பரிசாக ரொக்கத்தொகை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.