சிதம்பரம், டிச.4- சிதம்பரம் ஆறுமுகநாவலர் மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் தமிழக கோயிலின் கட்டிடக்கலைகள், சந்திரயான் ராக்கெட், சுற்றுசூழல், இயற்கை விவசாயம், கரிமிலவாயு எவ்வாறு தடுப்பது, எளிய முறையில் கணிதம், திட்டமிடுதல், நிலவுக்கு ரோவர் அனுப்புவது, ஓவியம், தையல் முறையின் நவீனம், வாழ்வியல் முறை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட செயல்முறைகள் செய்து காட்சிப்படுத்தி இருந்தனர். இந்தக் கண்காட்சியில் பள்ளியில் பயிலும் அனைத்து வகுப்புகளைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், மற்றும் மாண வர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு காட்சி படுத்தப் பட்ட படைப்புகளைப் பார்வையிட்டு அதன் செயல்பாடு களைக் கேட்டறிந்தனர். இதனைதொடர்ந்து லயன்ஸ் சங்க தலைவர் சின்ன ராசு மற்றும் செயலர் மணிகண்டன், ஆறுமுக நாவலர் பள்ளி யின் செயலாளர் அருள் மொழி செல்வன் தலைவர் சேது சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களின் படைப்புகளைப் பார்வையிட்டு விளக்கத்தைக் கேட்டறிந்த னர் . படைபாற்றலை சிறப்பாக வெளிபடுத்திய மாண வர்களுக்கு சிதம்பரம் லைன்ஸ் காஸ்மோபாலிட்டன் சங்கம் மற்றும் ஆறுமுக நாவலர் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினர்.