அலுவலக கழிவறைகளை சுத்தம் செய்யும் பகுதி நேர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், பல ஆண்டுகளாக பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று (நவ.9) மத்தியசென்னை மின் திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய சென்னை திட்ட கிளை தலைவர் வி.சீனிவாசன், செயலாளர் எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.