ராணிப்பேட்டை, ஏப். 24 - ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் பொது மக்களுக்கு தடையில்லா குடிநீர் விநியோகம் வழங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தலை மையில் புதனன்று (ஏப். 24) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பொது மக்களுக்கு தங்கு தடை யின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். கோடை காலத்தில் வெயி லின் தாக்கம் காரண மாக ஏற்படும் நீர் பற்றாக் குறையை கவனத்தில் கொண்டு பொதுமக்களுக்கு அன்றாடம் முறையான குடிநீர் வழங்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் மின்சார வாரிய அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணி யாற்றிட வேண்டும். விளை நிலங்களில் விவ சாயிகள் தங்கள் வேளாண் பயன்பாட்டிற்கு ஏற்றார் போல் நீரை பயன்படுத்த வேண்டும். வேளாண்மைத் துறை அலுவலர்கள் இது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். குடிநீர் பைப்புகள் பழுது காரணமாக குடிநீர் வீணாவது தடுக்கப்பட வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் (Pump operators) செயல்பட வேண்டும். எந்த இடத்திலும் பிரச்சனைகள் இருக்கக் கூடாது. அதே போன்று ஊராட்சி மற்றும் நகராட்சிகளில் குடிநீர் வரி மற்றும் சொத்து வரிகளை இது வரை முறையாக வசூ லிக்கப்படவில்லை. சொத்து வரி மற்றும் குடிநீர் வரியை முறையாக வசூலிக்க வேண்டும். இடம் மற்றும் கட்டிடத்தின் பரப்பளவிற்கு உகந்த சொத்து வரியை கணக்கிட்டு பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச. அறிவுறுத்தினார்.