கடலூர்,ஜன.8- கடலூர் அண்ணா விளை யாட்டு அரங்கில் கடந்த 4 ஆம் தேதி முதல் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமிற்கு தினமும் ஏராளமான இளைஞர்கள் உடல் தகுதி தேர்வில் பங்கு பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஜன.7) இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஆட்சேர்ப்பு முகாமிற்காக போடப்பட்ட கூடாரம் சரிந்து விழுந்தது. மேலும் அண்ணா விளை யாட்டு அரங்கில் தண்ணீர் தேங்கியுள்ளதால் முகாமை நடத்த முடியவில்லை.